இதுகுறித்த புகாரின்பேரில் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். பின்னர் இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அவர் மீது பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்ததால் அந்தந்த மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்ய சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி சேலம், தர்மபுரியில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சபரிசங்கர் மீது தர்மபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
500க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்துள்ள நிலையில், 15 புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் சுமார் ரூ.3.75 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவான சபரிசங்கரை தேடி வந்தனர். இதற்கிடையில் சபரிசங்கர், புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் தனிப்படை போலீசார் விரைந்தனர். அங்கு வீடு வாடகைக்கு எடுத்து தனியாக பதுங்கியிருந்த சபரிசங்கரை நேற்று அதிரடியாக கைது செய்து தர்மபுரிக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர். மோசடி செய்த பணத்தை பதுக்கி வைத்துள்ளாரா? அல்லது நிலமாக வாங்கி குவித்துள்ளாரா? என விசாரணை நடந்து வருகிறது.
The post சேலத்தில் ரூ.100 கோடியுடன் தலைமறைவானவர் புதுச்சேரியில் பதுங்கியிருந்த நகை கடை உரிமையாளர் கைது appeared first on Dinakaran.