ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ராஞ்சி: ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலத்தை 6 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்டில்ஊரகத்துறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அத்துறையின் அமைச்சர் ஆலம்கீர் ஆலமின் தனி செயலாளர் சஞ்சீவ்குமார் லால், வீட்டு பணியாளர் ஜஹாங்கீர் ஆலம் ஆகியோரை அமலாக்கத்துறை சமீபத்தில் கைது செய்தது.

இதுதொடர்பாக நேற்று முன்தினம் அமைச்சர் ஆலம்கீர் ஆலமிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி அவரையும் கைது செய்தது. இந்நிலையில், ஆலம் கீர் ஆலமை ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 6 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: