கேரளாவில் 4 நாட்களுக்கு பலத்த மழை

திருவனந்தபுரம்: கேரளாவில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து மழை பெய்கிறது. இந்நிலையில் வரும் 20ம் தேதி வரை கேரளாவில் பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று எர்ணாகுளம், கோழிக்கோடு, இடுக்கி, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை (18ம் தேதி) பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 19ம் தேதி பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 20ம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருச்சூர், பாலக்காடு உள்பட 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

The post கேரளாவில் 4 நாட்களுக்கு பலத்த மழை appeared first on Dinakaran.

Related Stories: