வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திமடைந்த மணிகண்டன், வெங்கடேசனை திட்டி விட்டு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து 5 பேருடன் மணிகண்டன் மீண்டும் பைக்கில் வந்தார். வெங்கடேசனை சரமாரியாக உருட்டுக்கட்டையால் தாக்கினார். மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தலையில் வெட்டினர். பின்னர் அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு அனைவரும் தப்பி சென்றனர். பலத்த காயத்துடன் வெங்கடேசன் அலறி துடித்தார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வெங்கடேசனை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வெங்கடேசனுக்கு 57 தையல் போடப்பட்டது. இதற்கிடையில் தகவலறிந்து திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மணிகண்டனின் நண்பர்கள் 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post பேசுவதற்கு செல்போன் தர மறுத்ததால் ஆத்திரம்; மொபைல் ஷோரூம் ஊழியருக்கு கத்தி வெட்டு, கட்டை அடி: வாலிபர் கைது; 5 பேருக்கு வலை appeared first on Dinakaran.