அந்த நாட்டின் கோபன்ஹெகன் நகரில் 7வது ஆண்டாக ஒளித்திருவிழா தொடக்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் தொடங்கும் இந்த திருவிழாவை காண அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமானோர் குவிகின்றனர். மின்விளக்குகளை கொண்டு கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ள 50க்கு மேற்பட்ட வடிவங்கள் பார்வையாளர்களை வியக்கவைக்கும் வகையில் அமைத்துள்ளன.
அந்த திருவிழாவின் சிறப்பு அம்சமாக அமைக்கப்பட்டுள்ள பிக்சல் எர்த் என்று பெயரிடப்பட்டுள்ள வடிவம் இளம் ஜோடிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 15க்கும் மேற்பட்ட ஜோடிகள் அங்கு திருமணம் செய்துகொண்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அந்த வடிவத்தை உருவாக்கியவரின் திருமணமும் அங்கேயே நடந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒளித்திருவிழாவிற்கு அந்த நாட்டு மக்களின் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எல.ஈ.டி விளக்குகளால் கனவுலகத்தை உருவாக்கும் வடிவமைப்பாளர்களுக்கு ங்கு வரும் பார்வையாளர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
The post டென்மார்க் நாட்டில் 7ம் ஆண்டாக ஒளி திருவிழா கோலாகலம்: இளம் ஜோடிகளுக்கு திருமண இடமாக மாறியதற்கு வரவேற்பு appeared first on Dinakaran.