மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

காரிமங்கலம், ஜன.13: காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக ஏரியிலிருந்து மண் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதன்பேரில், காரிமங்கலம் போலீசார் பெரியாம்பட்டி -பாலக்கோடு சாலையில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அப்போது, பூலாப்பட்டி விநாயகர் கோயில் அருகே வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டதில் சட்ட விரோதமாக நொரம்பு மண் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் டிராக்டர் மற்றும் ட்ரெய்லரை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிராக்டர் உரிமையாளர் அருண்குமார்(32) என்பவரை கைது செய்தனர்.

The post மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: