தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 3 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் மக்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. பல்வேறு உருமாற்றங்களை தொடர்ந்து சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா பாதித்தவர்கள் 3,4 நாட்களில் குணமாகி வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஆர்டி -பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். தற்போது பரவும் புதிய தொற்று எந்த வகையானது என்பது பற்றி ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் தெரியப்படுத்தப்படும். சபரிமலை செல்லும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை அவசியம் இல்லை,”இவ்வாறு தெரிவித்தார்.
The post உருமாறிய கொரோனா பாதித்தவர்கள் 3,4 நாட்களில் குணமாகி வருகின்றனர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.