நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல்

சென்னை: “தோழர் எம்.செல்வராஜ் (வயது 67) இன்று (13.5.2024) விடியற்காலை 2 மணிக்குத் தனியார் மருத்துவமனையில் மறைவுற்றார் என்பதை அறிந்து பெரிதும் வருந்துகிறோம்” என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னணித் தோழரும், தேசிய குழு உறுப்பினரும், நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினருமான தோழர் எம்.செல்வராஜ் (வயது 67) இன்று (13.5.2024) விடியற்காலை 2 மணிக்குத் தனியார் மருத்துவமனையில் மறைவுற்றார் என்பதை அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.

50 ஆண்டு காலம் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சிறந்த பொதுநலத் தொண்டராக உழைத்தவர். நாகை மக்களவை உறுப்பினராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். எளிமையானவர் – பழகுவதற்கு இனிமையானவர். அவரது இழப்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்குப் பேரிழப்பாகும். அவர் பிரிவால் பெரிதும் துயருறும் குடும்பத்தாருக்கும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும் கழகத்தின் சார்பில் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

The post நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: