தடையின்றி மின்சாரம்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை

சென்னை: குடிநீர் மற்றும் தடையின்றி மின்சாரம் வழங்குவது குறித்து துறைச் செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தி வருகிறார். ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் கோடை வெப்பத்தின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தடையின்றி மின் விநியோகம் கிடைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள் எத்தனை என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

The post தடையின்றி மின்சாரம்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: