நாகை தொகுதி எம்.பி. செல்வராஜ் மறைவிற்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

சென்னை: “தோழர் எம். செல்வராஜ், எம்.பி. உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்” என ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, அந்தக் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவரும், நான்கு முறை நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவருமான தோழர் எம். செல்வராஜ், எம்.பி. உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

அனைவரிடத்திலும் எளிமையாக பழகக்கூடியவர். மக்கள் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் திறம்பட எடுத்துரைத்த பெருமைக்குரியவர். இவருடைய இழப்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பாகும்.

தோழர் செல்வராஜ் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post நாகை தொகுதி எம்.பி. செல்வராஜ் மறைவிற்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: