இந்த நிலையில், டெல்லியில் அதிகரித்துள்ள ‘மிகக் கடுமை’ அளவுள்ள மாசு, அனைத்து வயதினரையும் நுரையீரல் மட்டுமல்லாது, இதயம், மூளை போன்ற பிற முக்கிய உறுப்புகளையும் பாதிப்படைய செய்யும் என டெல்லியை சேர்ந்த மருத்துவர்கள் மக்களை எச்சரித்துள்ளனர். இதுபற்றி மருத்துவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: மாசுபாடு அதிகரித்ததன் விளைவாக தலைவலி, பதட்டம், எரிச்சல், குழப்பம் மற்றும் நினைவாற்றல் திறன் குறைதல் போன்ற நிகழ்வுகள் திடீரென அதிகரித்துள்ளன. குறிப்பாக வயதானவர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் போன்றவர்களை அதிகம் பாதிப்படைய செய்கிறது. இதற்கு முக்கிய காரணம், காற்றில் அதிகரிக்கும் நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகியவற்றுடன் நரம்பியல் சார்ந்த நினைவாற்றலுடன் நேரடியாக தொடர்புடையது என்பதால் அவை நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றன என சப்தார்ஜங் மருத்துவமனையில் டாக்டர் நீரஜ் குப்தா தெரிவித்தார்.
The post டெல்லியில் அபாய கட்டத்தை எட்டிய காற்று மாசு.. நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!! appeared first on Dinakaran.