இதை பார்த்த பிரபாகர் உடனடியாக லாரியிலிருந்து இறங்கி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்தது. இது குறித்த தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post ரெட்டிச்சாவடி அருகே சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.