சென்னை: காவிரி நீரை திறந்து விடாத கர்நாடக அரசு, ஒன்றிய அரசை கண்டித்து தேமுதிக சார்பில் 27ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சாவூர் பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.