தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டும் அல்ல மேற்குவங்க மாநிலத்தில் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசாரை கூட தேர்தல் கமிஷன் விட்டு வைக்கவில்லை. அங்கு நேற்று மட்டும் மாநிலம் முழுவதும் உள்ள 173 போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக தேர்தல் கமிஷன் மாற்றி உள்ளது. இதில் கொல்கத்தா காவல்துறையின் கீழ் வரும் 31 காவல் நிலையங்களும் அடங்கும்.
குறிப்பாக முதல்வர் மம்தா போட்டியிடும் பவானிபூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரும் மாற்றப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, இதற்கு முன் சிறப்புப் பணிப்படையில் பணியாற்றிய சவுமித்ரா பாசு, பவானிபூர் காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரியாகப் பொறுப்பேற்கவுள்ளார். டெல்லியில் இருந்து இந்த உத்தரவு வந்துள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்தார்.
