எஸ்ஐஆர் பணிக்கு பிறகு மேற்கு வங்க மாநிலத்தில் நான்காவது துணை வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இருப்பினும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட அல்லது புதிதாகச் சேர்க்கப்பட்ட பெயர்களின் மொத்த எண்ணிக்கை குறித்த எந்தத் தகவலையும் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. இதனால் பெண்டிங்கில் வைக்கப்பட்ட 60 லட்சம் வாக்காளர்களில் எத்தனை பேர் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது தெரியவில்லை.
