தொண்டி பகுதியில் கனமழை

 

தொண்டி, செப். 4: தொண்டி, நம்புதாளை, முகிழ்த்தகம் உள்ளிட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. வெயிலின் தாக்கத்தால் மதிய நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்தனர். கடந்த சில நாள்களாக சுற்றுவட்டாரத்தில் மழை பெய்த பெய்த போதிலும் தொண்டி பகுதியில் மழை இல்லை. இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 2 மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post தொண்டி பகுதியில் கனமழை appeared first on Dinakaran.

Related Stories: