காஞ்சிபுரம்: மணிமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலியாகினர். பைக்கில் கல்லூரிக்கு சென்றபோது ஆதனூரில் நடந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் சந்தோஷ் (20), தசரதன் (20) ஆகியோர் உயிரிழந்தனர்.இந்த விபத்து குறித்து தாம்பரம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.