நடைபாதையை மீட்டு தர கோரி மனு

மதுரை, மே 12: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு தலித் விடுதலை இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில், ‘வாடிப்பட்டி அருகேயுள்ள தாதம்பட்டி காலனி மற்றும் போடிநாயக்கன்பட்டி பகுதியில் வசிக்கும் மக்கள், பெரும்பான்மையாக விவசாய கூலி தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் பொது நடைபாதையை ஆக்கிரமித்து பிளாட் போட்டு விற்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து கலெக்டர் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டு தர வேண்டும்’ என தெரிவித்திருந்தனர்.

The post நடைபாதையை மீட்டு தர கோரி மனு appeared first on Dinakaran.

Related Stories: