அகரம்சீகூர் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

குன்னம், மே 25: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் ஊராட்சியை பேரூராட்சி ஆக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அகரம்சீகூர் ஊராட்சி நான்கு ரோடுகள் இணையும் இடமாக உள்ளது. கிழக்கே ஜெயங்கொண்டம், கும்பகோணம், மேற்கு பெரம்பலூர், திருச்சி, வடக்கே திட்டக்குடி, சென்னை, தெற்கே அரியலூர், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் உள்ளன. இங்கு தினமும் சுமார் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்த பகுதியில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் பல்வேறு வேலைகளுக்கு அருகில் உள்ள திட்டக்குடி நகராட்சிக்கு வந்து செல்கின்றனர்.

அகரம்சீகூர் ஊராட்சியாக இருப்பதால் பெரிய அளவில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை. மேலும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் திட்டக்குடி நகராட்சி இருப்பதால் அந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் அகரம்சீகூர் பகுதியில் இடம் வாங்கி வீடு கட்டி வாழ்கின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை குடிநீர் வசதி உட்பட செய்து தர இயலாத நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி தேர்தலுக்கு முன் உரிய நடவடிக்கை எடுத்து அகரம்சீகூர் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post அகரம்சீகூர் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: