குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை அம்மாப்பேட்டை உத்திராபதியார்கோயில் சம்வத்ஸரா அபிஷேகம்

தஞ்சாவூர், ஆக.26: பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டை உத்திராபதியார் கோவில் தெருவில் உள்ள உத்திராபதீஸ்வரர் ஆலயத்தில் முதலாம் ஆண்டு சம்வத்ஸரா அபிஷேகம் நிகழ்ச்சி ஆலய நிர்வாகி துரைராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கோயிலில் கடந்தாண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து நேற்றுடன் ஒரு வருடம் முடிந்த நிலையில் உத்திராபதீஸ்வரருக்கு விசேஷ மூலமந்திர ஹோமம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஆலய நிர்வாகி ஞானசேகர், கிருஷ்ணமூர்த்தி, கந்தசாமி, ராஜேந்திரன், தர்மராஜ் செய்திருந்தனர்.

Related Stories: