திருவாடானை,ஆக.24: திருவாடானை அருகே சின்னத்தொண்டி கிராமத்தில் ஊரின் மையப்பகுதியில் பொது ஊரணி ஒன்று உள்ளது. மூன்று ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஊரணியில் கரை பகுதி முழுவதும் சிலர் வீடுகளை கட்டியும் மற்றும் கழிப்பறை குளியல் அறை போன்ற கட்டுமானங்களை ஆக்கிரமித்து கட்டி வைத்துள்ளனர். மேலும் மிளகாய் தோட்டம், வைக்கோல் படப்பு போன்றவைகளை வைத்து வேலி அமைத்துள்ளனர். இதனால் ஊரணி பாதி அளவாக சுருங்கி விட்டதாக கூறி அதனை அகற்ற வேண்டும் என சின்னத்தம்பி கிராமத்தைச் சேர்ந்த மகளிர் மன்ற பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு வந்து தாசில்தாரை சந்தித்து மனு அளித்தனர்.