திருப்புத்தூர், ஜூலை 27: திருப்புத்தூர் அருகேயுள்ள நகர வயிரவன்பட்டி வயிரவர் சுவாமி பிரமோற்சவ விழாவில் நேற்று வெள்ளி ரத்தத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. திருப்புத்தூர் அருகே நகர வயிரவன்பட்டி வளரொளி விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி, வடிவுடையம்மை சமேத வளரொளிநாதர் திருக்கோயிலில் கடந்த ஜூலை 23ல் வயரவ சுவாமி பிரமோற்சவத் திருவிழா காப்புக்கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. 4ம் திருநாளான நேற்று காலை கோயில் மண்டபத்தில் வயிரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வெள்ளி அலங்காரத்தில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.