நெல்லை, டிச. 2: நெல்லை மாநகர பகுதிகளில் அடித்து நொறுக்கிய வடகிழக்கு பருவமழையால் தாழ்வான பகுதிகளில் மட்டுமின்றி பிரதான சாலைகளிலும் மழை நீர் தேங்கியது. கடந்த 3 நாட்களாக நெல்லை டவுனில் பல தெருக்களில் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதையடுத்து ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது. டவுன் தெற்கு ரதவீதி பகுதியில் நீர் தேங்கிய பகுதியில் உள்ள ஓடை மேல் சிலாப்புகளை அகற்றி பொக்லைன் உதவியுடன் உள்ளே நீரோட்டத்திற்கு தடையாக தேங்கியிருந்த ஆக்கிரமிப்பு குப்பை கழிவுகளை அகற்றினர். அப்போது அந்த ஓடைகளில் ேதாண்டத்ேதாண்ட மதுபாட்டில்கள் குவியல் குவியலாக வெளியே வந்தன.