கவுஹாத்தி: அசாம் முதல்வராக பாஜ தலைவர் ஹிமந்த பிஸ்வா சர்மா கடந்த 13ம் தேதி இரண்டாவது முறையாக பதவி ஏற்றார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி அசாம் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா 2026 அறிமுகம் செய்யப்பட்டது. பேரவை முதல் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று எதிர்க்கட்சிகளின் எதிர்பையையும் மீறி பொது சிவில் சட்டம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாப்படி, அசாமில் இனி திருமணம், விவாகரத்து, நிலம், சொத்து தொடர்பான விஷயங்களில் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சட்ட விதிகளே இருக்கும். பலதார திருமணத்தை தடை செய்யும். லிவ்-இன் உறவுகள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
