கோவில்பட்டி, ஆக.14: கோவில்பட்டியில் தடுப்புசுவரில் ஆட்டோ மோதி கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி பலியானார். கோவில்பட்டி சண்முகசிகாமணிநகரை சேர்ந்தவர் சந்திரன் மனைவி பேச்சியம்மாள் (65). இவர்களுக்கு 2 மகன்களும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கர்ப்பிணியான ஐஸ்வர்யாவை, தாய் பேச்சியம்மாள் கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து விட்டு, இருவரும் ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். கோவில்பட்டி மாதாங்கோவில் ரோடு விலக்கில் வரும்போது, எதிர்பாராதவிதமாக சாலையின் மையத்தில் உள்ள தடுப்பு சுவரில் ஆட்டோ பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த பேச்சியம்மாள் மீது ஆட்டோ கவிழ்ந்து கிடந்ததில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் கர்ப்பிணி ஐஸ்வர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.