வைகுண்டத்தில் நிதிசார் கல்வி முகாம்

வைகுண்டம், ஜூலை 24: வைகுண்டத்தில் நிதிசார் கல்வி முகாம் நடந்தது.  தமிழ்நாடு  கிராம வங்கி, நபார்டு வங்கி சார்பில் வைகுண்டத்தில் நிதிசார் கல்வி முகாம் நடந்தது. தமிழ்நாடு கிராம வங்கி வைகுண்டம் கிளை மேலாளர் நவமணி ஜெபதுரை தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இந்தியன்  வங்கி ஆழ்வார்திருநகரி கிளை மேலாளர் செல்வம், வங்கியின் பல்வேறு சேமிப்பு திட்டங்கள், கடன், சமூக  பாதுகாப்பு திட்டங்கள், பல்வேறு சேவைகளை விளக்கினார். முகாமில் தமிழ்நாடு கிராம வங்கி கிளை உதவி  மேலாளர்கள் செல்வமணி, அருண்குமார், காசாளர் தேவி, கடைநிலை ஊழியர்  அந்தோணி யாகப்பன், வணிக முகவர்கள் ரூத், உமாபார்வதி, முக்கண்ணன் மற்றும்  மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories: