புதூர் வீரகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

தூத்துக்குடி, அக்.11: புதூர் வீரகாளியம்மன் கோயில் கொடைவிழாவை யொட்டி நேற்று முன்தினம் மாலை 308 திருவிளக்கு பூஜை நடந்தது. தக்கார் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்த இந்த பூஜையில் மங்கையர்கரசி மாதர் சங்க தலைவர் பெருமாள் பூபதி, அழகுராணி ஆகியோர் பூஜைக்குரிய பாடல்களை பாடி நிகழ்ச்சியை நடத்தினர். இரவு பொங்கலிடுதல், முளைப்பாரி ஊர்வலம், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜை இடம் பெற்றது. திருவிளக்கு பூஜை ஏற்பாடுகளை சந்திரசேகர், ஆண்டிச்சாமி பாண்டி, அங்குசாமி, ரெகுராமசாமி, சிவசுப்புராம் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: