மீலாடி நபியையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை

 

பெரம்பலூர்,செப்.17: பெரம்பலூர் மாவட்டத்தில் ‘மிலாடி நபி’யையொட்டி தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்திற்கும் இன்று (17ஆம்தேதி) அன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இது குறித்து அவரது செய்தி குறிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக் கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் மிலாடி நபியியை முன்னிட்டு 17ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று ஒருநாள் மட்டும் ‘உலர் தினமாக’ (DRY DAY) விடுமுறை அறிவிக்கப் படுகிறது. இவ்வாறு, அதில், கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

The post மீலாடி நபியையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: