பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (23ம்தேதி) நடக்கிறது என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பெரம்பலூர் மாவட்ட விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 23ம் தேதி காலை 11 மணியள வில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட மன்றத்தில் நடைபெற உள் ளது. இக்கூட்டத்தில் வேளா ண்மை சம்பந்தமான நீர்ப் பாசனம், வேளாண்மை கட னுதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண் மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற் கான நலத்திட்டங்கள் பற் றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசா யிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெ ரிவிக்கலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: