நகைக்கடையில் திருடியவர்களுக்கு வலை

 

பெரம்பலூர், ஜூன் 12: பெரம்பலூர் நகைக் கடையில் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி நகை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பலூர் அங்காளம்மன் கடைவீதி பகுதியில் ராஜேந்திரகுமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் ஒரு தம்பதியினர் நகை வாங்க அந்தக் கடைக்குச் சென்றுள்ளனர்.

அங்கே நகைக் கடையில் பணியில் இருந் த ஊழியரின் கவனத்தை திசை திருப்பிய தம்பதியி னர் அரைப்பவுன் மோதிர த்தை நைசாக திருடிச் சென்று தலைமறைவாகினர். இது தொடர்பாக நகைக்க டை உரிமையாளர் ராஜேந் திர குமார் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் நகர போலீசார் விரைந்து வந்து நகைக்கடையிலும், அருகே உள்ள கடைகளிலும் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை ரீவைண்ட் செய்து பார்த்து, நகைகளை திருடி சென்ற தம்பதியினரைத் தேடி வருகின்றனர்.

The post நகைக்கடையில் திருடியவர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: