சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு

 

கோவை, ஜூன் 21: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட கணக்கெடுப்பாளர்கள் வியாபாரிகளின் இடங்களுக்கே நேரில் வந்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்வார்கள். எனவே அனைத்து சாலையோர வியாபாரிகளும் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் குடும்ப அட்டை ஆகிய ஆவனங்களுடன் கணக்கெடுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

The post சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: