சட்டம் படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை

கோவை, ஜூன் 27: கோவை மாவட்டத்தில் 2024-2025-ம் நிதியாண்டிற்கு சட்டப்படிப்பு படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் சட்டப்படிப்பு படித்த மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் தங்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொள்வதற்கு உரிய கட்டணங்கள் செலுத்துவதற்கும் மற்றும் தேவையான சட்டப் புத்தகங்கள் வாங்கவும் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார். உதவித்தொகை பெற மாற்றுத்திறன் சதவீதமானது குறைந்த பட்சம் 40 சதவீதம் அல்லது அதற்கு மேல் பெற்றிருத்தல் வேண்டும். சட்டப்படிப்பு முடித்து தமிழ்நாடு பார் கவுன்சிலிலோ அல்லது புதுச்சேரி பார் கவுன்சிலிலோ பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள்.

தமிழ்நாட்டை வசிப்பிடமாக கொண்டு வெளிமாநிலங்களில் சட்டப்படிப்பு பயின்று இருப்பின் பயனாளி தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறப்பட்டு தமிழ்நாடு பார்கவுன்சிலில், புதுச்சேரி பார்கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டு வழக்கறிஞர் பணி மேற்கொண்டு வருபவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள். ஆனால், வெளிமாநிலங்களில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறவில்லை என்பதற்கான உறுதிமொழி சான்று பெற்றித்தல் வேண்டும். இதே திட்டத்தின் கீழ் வேறு ஒரு துறையிடமிருந்து (பிற்படுத்தப்பட்டோர்/ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம்) நிதியுதவி பெறப்படவில்லை என்பதை உறுதி செய்திடல் வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், சட்டப்படிப்பு சான்றிதழ் மற்றும் வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு சான்றிதழ் ஆகிய நகல்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம், கோவை- 18. என்ற முகவரிக்கு ஜூலை 31ம் தேதிக்கு முன்னர் நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

The post சட்டம் படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.