அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வில் 18 பேர் பங்கேற்பு

 

கோவை, ஜூன் 29: கோவை மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அடல் டிங்கரிங், உயர் தொழில்நுட்ப அறிவியல், மொழி, தொழிற்கல்வி, கணிதம் போன்றவைக்கு ஆய்வகங்கள் உள்ளது.

இந்த ஆய்வகங்களை பராமரிப்பதற்காக அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தலா ஒரு ஆய்வக உதவியாளர் பணியிடம் இருந்து வருகிறது. இந்நிலையில், மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, உபரியாக உள்ள ஆய்வக உதவியாளர்களை பணி இடம் அனுமதிக்கப்படாத பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்யும், தேவை உள்ள பள்ளிகளுக்கு பகிர்ந்து அளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நேற்று நடந்தது. இந்த கலந்தாய்வில் மொத்தம் 18 ஆய்வக உதவியாளர்கள் கலந்துகொண்டு விரும்பிய இடங்களை தேர்வு செய்தனர்.

The post அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வில் 18 பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.