ஒன்றிய அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கண்ணை கட்டி ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூன் 27: கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நீட் தேர்வு தேர்வு ரத்து செய்யக்கோரியும், முறைகேட்டை கண்டித்தும் நேற்று எஸ்டிபிஐ கட்சியினர் கண்ணை கருப்பு துணியால் கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இதற்கு மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமை தாங்கினார். மாநில வர்த்தக அணி செயலாளர் அப்துல் கரீம் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்டவர்கள் நீட் தேர்வு மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.  அப்போது மாவட்ட பொது செயலாளர் அப்துல் காதர் பேசுகையில்,‘‘நீட் தேர்வில் ஆண்டு தோறும் பல்வேறு முறைகேடு தொடர்ந்து நடந்து வருகிறது. பீகார், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு கோச்சிங் சென்டர்களில் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பெற்று கொண்டு வினாத்தாளை வெளியிட்டுள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏழை மாணவ, மாணவிகள் படிக்க கூடாது என்ற நோக்கில் ஒன்றிய அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. மருத்துவக்கல்வியை கார்ப்பரேட் மயமாக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை வேண்டும்’’ என்றார்.  இதில், கட்சி நிர்வாகிகள் அப்பாஸ் இப்ராஹிம், உமர் ஷரீப், ஜாபர் சாதிக், சிங்கை நாசர், யாசர் அராபஹ், மகளிர் அணி தலைவி கமீலா பேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது ரபீக், மாவட்ட செயலாளர் மன்சூர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கண்ணை கட்டி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.