கோவையில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ் பறிமுதல்

 

கோவை, ஜூன் 28: சென்னையில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு இயக்கிய வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்சை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். தமிழகத்தில் 1,535 ஆம்னி பஸ்கள் பதிவு செய்து முறையாக இயங்கி வருகிறது. இவை தவிர, 943 ஆம்னி பஸ்கள் பிற மாநிலங்களில் பதிவு செய்து அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு பெற்று, தமிழகத்திற்குள் விதிகளை மீறி இயங்கி வருகிறது.

இதனை ஒழுங்குபடுத்தும் வகையில், கடந்த 14-ம் தேதி முதல் உரிய தமிழக பதிவு எண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயக்க போக்குவரத்துத்துறை தடை விதித்தது. இதையடுத்து தமிழகத்தில் அரசின் உத்தரவை மீறி வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறதா? என கண்காணித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி, கோவை மாவட்டத்திலும், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை சென்னையில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு செல்வதற்காக கோவை வழியாக ஆம்னி பஸ் ஒன்று வந்தது. இந்த ஆம்னி பஸ் கோவை காந்திபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையம் அருகே காலையில் வந்தது.

அப்போது, அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அந்த பஸ்சில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பஸ் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ் என்பது தெரியவந்தது. பின்னர், பஸ்சில் இருந்த கேரளாவை சேர்ந்த 21 பயணிகளும் கீழே இறக்கிவிட்டு, அவர்களை சொந்த ஊர் செல்ல கேரள மாநில அரசு பஸ்சில் அனுப்பிவைத்தனர். மேலும், ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டு மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து பஸ்சை விடுவித்தனர்.

The post கோவையில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.