கோவையில் பட்டா மாறுதல் செய்ய மோசடி

 

கோவை, ஜூன் 27: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் தெற்கு வட்ட நகர நில அளவை பதிவேடு துறையில் சார் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சுரேஷ்குமார் (39). இவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்த புகார் மனுவில், ‘‘தான் பணியாற்றும் அலுவலகத்தில் முதுநிலை வரைவாளரின் பட்டா மாறுதலுக்கான பயனாளர் ஐடி மற்றும் கடவு சொல்லை எங்களின் அனுமதி இன்றி அதை எடுத்து அந்த விவரங்களை நாங்கள் பயன்படுத்துவது போல் காட்டி பயன்படுத்தி வருகின்றனர்.

ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றும் நோக்கத்தில் பட்டா மாறுதல் அப்ரூவல் செய்வதும், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு பரிந்துரை செய்வதும் பின்னர் பட்டா மாறுதல் செய்து வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது. எங்கள் அலுவலகத்தின் பயனாளர் ஐடி மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை பயன்படுத்தி பட்டா மாறுதல் பரிந்துரை வழங்கிய நபர்களை கண்டறிந்து சட்டப்படியாக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கோவையில் பட்டா மாறுதல் செய்ய மோசடி appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.