யோகா போட்டியில் கோவை மாணவ, மாணவிகள் அசத்தல்

 

கோவை, ஜூன் 28: தென்னிந்திய அளவிலான யோகா போட்டி கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் 6 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்றனர். இந்தப்போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தஞ்சாவூரை சேர்ந்த மாணவ, மாணவிகள் பெற்றனர். இரண்டாம் இடத்தை கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள் பிடித்தானர்.

மேலும், இந்த போட்டியில் நடைபெற்ற ஒவ்வொரு வயது பிரிவுகளில் முதலிடம் பிடித்தவர்கள் அந்தமானில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவர்களை கோவை ஓசோன் யோக மையத்தின் நிறுவனர் மற்றும் பயிற்சியாளர் பாலகிருஷ்ணன், இண்டர்நேஷனல் யூத் யோகா பெடரேஷன் நிறுவனர் ஆறுமுகம் வாழ்த்து தெரிவித்தனர்.

The post யோகா போட்டியில் கோவை மாணவ, மாணவிகள் அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.