மாவட்டத்தில் 297 மி.மீ மழை பதிவு

 

கோவை, ஜூன் 29: கோவை மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கோவை மாநகர் முழுவதும் நேற்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதியடைந்தனர். மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காலநிலை நிலவியது. மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து உள்ளது.

அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. சிறுவாண, பில்லூர் அணைகள் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் 297மி.மீ மழை பதிவாகியது. அதன்படி, சிறுவாணி அடிவாரம் 21மி.மீ, பொள்ளாச்சி 14.20மி.மீ, மாக்கியானம்பட்டி 16.20மி.மீ, அனைமலை 5மி.மீ, ஆழியார் 4மி.மீ, சின்கோனா 38மி.மீ, சின்னகல்லார் 82மி.மீ, வால்பாறை 42மி.மீ, வால்பாறை தாலுகா 39மி.மீ, சோலையார் 32மி.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து இன்று, நாளை என இரண்டு நாட்கள் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

The post மாவட்டத்தில் 297 மி.மீ மழை பதிவு appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.