கத்தியால் வெட்டி வழிப்பறி கொள்ளையர்கள் சிக்கினர்

பெரம்பூர்: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் விஜய் (22). இவர், கொடுங்கையூர் கே.எம்.ஏ கார்டன் 2வது தெருவில் தங்கி, பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 20ம் தேதி இரவு வேலை முடித்து, தனது நண்பர் சங்கர் (45) என்ற நபருடன் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், இவர்களை கத்தியால் வெட்டி, அவர்களிடம் இருந்த 500 ரூபாயை பறித்து சென்றனர். படுகாயமடைந்த சங்கர், விஜய் ஆகிய 2 பேரும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், கொடுங்கையூர் யுனைடெட் காலனியை சேர்ந்த பாலாஜி (20), கண்ணதாசன் நகரை சேர்ந்த காளீஸ்வரன் (20), கொருக்குப்பேட்டை பகுதியை  சேர்ந்த பாண்டிதுரை (20) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை நேற்று கைது செய்தனர்….

The post கத்தியால் வெட்டி வழிப்பறி கொள்ளையர்கள் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: