ஈரோடு மண்டல கோயில்களில் திருப்பணி

ஈரோடு, டிச. 24: ஈரோடு மண்டலத்துக்குட்பட்ட ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள கோயில்களில் திருப்பணி மேற்கொள்வது குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி தலைமையில் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இதில் இரு மாவட்டங்களை சேர்ந்த கோயில் செயல் அலுவலர்கள், தக்கார்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கோயில்களுக்கு சொந்தமான கட்டிடத்தினை புனரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், சிதிலமடைந்த நிலையில் உள்ள கோயில்களை புனரமைத்து பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டன. மேலும், திருப்பணிக்குழு உருவாக்கப்பட்டு அக்குழு திருப்பணி கமிட்டி மற்றும் நிதிக் கமிட்டி என நிர்வாக வசதிக்காக 2 குழுக்களை தனித்தனியாக அமைப்பது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

The post ஈரோடு மண்டல கோயில்களில் திருப்பணி appeared first on Dinakaran.

Related Stories: