தொழில் நிறுவனங்களில் கலெக்டர் ஆய்வு

 

ஈரோடு,ஜூலை 5: சென்னிமலை ஊராட்சி ஒன்றியப்பகுதியில் அரசின் மானியத்துடன் தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார். சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், முகாசிபிடாரியூர் ஊராட்சியில் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனம் சார்பில், மானிய கடனுதவியுடன் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழக அரசின் சிறப்புத் திட்டமான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் தொடங்கப்பட்ட பருத்தி மறு சுழற்சி நிறுவனத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட பொதுமேலாளர் திருமுருகன் உடன் இருந்தார்.

The post தொழில் நிறுவனங்களில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: