மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு, ஜூலை 3: மனித நேய மக்கள் கட்சி சார்பில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு, கருங்கல்பாளையம், காந்திசிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மனித நேய மக்கள் கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் சம்சுதீன் வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது லரீப் முன்னிலை வகித்தார். விசிக மாநகர் மாவட்ட செயலாளர் சாதிக் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

இதில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு காரணமான அதிகாரிகளை பணி நீக்கம் செய்து, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மனித நேய மக்கள் கட்சியின் மாநகர் மாவட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

The post மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: