பாலமலை அடிவாரத்தில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது

 

பவானி, ஜூன் 29: அம்மாபேட்டை போலீசார் பாலமலை அடிவார பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அம்மாபேட்டை அருகே பாலமலை அடிவாரத்தில் உள்ள கண்ணப்பள்ளி, பி.கே.புதூரில் சந்தேகப்படும்படி நின்றவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் சாராய பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் கொளத்தூர் தாலுகா பாலமலையில் உள்ள நமன்காட்டைச் சேர்ந்த பெருமாள் மகன் தர்மலிங்கம் (46) என்பதும் பாலமலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி, பாக்கெட்டுகளாக கொண்டு வந்து மலையடிவாரத்தில் சட்ட விரோதமாக விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதனைத்தொடந்து, போலீசார் தர்மலிங்கத்தை கைது செய்ததோடு, அவர் விற்பனைக்கு வைத்திருந்த தலா 450 மில்லி அளவுள்ள 14 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

The post பாலமலை அடிவாரத்தில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: