ஈரோடு மாநகராட்சியில் போக்குவரத்திற்கு இடையூறான விளம்பர தட்டிகள் அகற்றம்

 

ஈரோடு,ஜூலை5: ஈரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், கால அவகாசம் முடிந்தும் அகற்றாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் விளம்பர பலகைகள் நிறுவ மாநகராட்சி சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.உரிய அனுமதி இல்லாமலும், ஆபத்தான நிலையிலும் போக்குவரத்திற்கு இடையூறாகவும் வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து அகற்றி வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா பகுதியில், கால அவகாசம் முடிந்தும் அகற்றாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை,மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர். மேலும் உரிய அனுமதியின்றியும், உரிய அளவை தாண்டியும் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களையும் ஊழியர்கள் அகற்றினர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது,

ஈரோடு மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் வகையில் மாநகர பகுதியில் விதிமுறைகளின் அடிப்படையில் விளம்பர பேனர்கள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கான கால அவகாசம் முடிந்தால், மாநகராட்சிக்கு மீண்டும் கட்டணம் செலுத்தி,விளம்பர பேனர்களை வைத்துக் கொள்ளலாம். அப்படி கட்டணம் செலுத்தாத நிறுவனங்களின் விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டு வரப்படுகிறது. மேலும் உரிய அனுமதியின்றியும் உரிய கால அளவை தாண்டியும் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களும் அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

The post ஈரோடு மாநகராட்சியில் போக்குவரத்திற்கு இடையூறான விளம்பர தட்டிகள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: