எஸ்எம்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் சார்பில், பள்ளிக்கு கல்வி சீர் வழங்கப்பட்டது. இதையடுத்து, பள்ளிக்கு அதிக விடுமுறை எடுக்காமல் வந்த மாணவர்கள் மற்றும் தேர்வுகளில் முதலிடம், 2ம் இடம், 3ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து, மாணவர்களின் கலைநிகழ்ச்சி மற்றும் பேச்சு, கட்டுரை, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
முடிவில் ஆசிரியர் சண்முகநாதன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நிர்வாகம், ஆவூர் எஸ்எம்சி உறுப்பினர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில், தலைமையாசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
The post மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு கல்விசீர் appeared first on Dinakaran.
