அதில், நிறுவனத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் 25% பேர் திருமணமான பெண்கள். மொத்தப் பெண் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் திருமணமானவர்கள் என்பதே இதன் அர்த்தம். அதுமட்டுமில்லாமல், நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 70% பெண்களே. 30% மட்டுமே ஆண்கள். நாட்டிலேயே பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மிகப்பெரிய தொழிற்சாலையாக தமிழகத்தில் அமைந்துள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் உருவெடுத்துள்ளது. திருமணமான பெண்களுக்கு பணியமர்த்தக் கூடாது என கொள்கை முடிவு ஏதும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
இதேபோல், ஆலையில் பணியாற்றும் பணியாளர்கள் எந்த அடையாள சின்னங்களையும் அணிய தடை விதிக்கப்பட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம்; மதம் சார்ந்து இந்த தடை விதிக்கப்படவில்லை. இது பாதுகாப்பு காரணங்களுக்காகவே தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோக ஆபரணங்களை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதத்தினருக்கும் இந்த தடை விதிக்கப்படுகிறது. பல நிறுவனங்களில் இதுபோன்ற நடைமுறை வழக்கத்தில் உள்ளது என்று விளக்கம் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post மணமான பெண்களுக்கு பணி இல்லையா?.. திருமணமான பெண்களை பணியமர்த்தக் கூடாது என கொள்கை முடிவு ஏதும் இல்லை: ஃபாக்ஸ்கான் விளக்கம்..!! appeared first on Dinakaran.