குழந்தை இல்லாத விரக்தியில் ஒட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை சர்வோதயா நகரைச் சேர்ந்தவர் ஹரிகரன் (25). ஓரிக்கையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு, ஷர்மிளா என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமாகி 4 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் ஹரிகரன் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ஹரிகரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், ஹரிகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post குழந்தை இல்லாத விரக்தியில் ஒட்டுநர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: