சோழவரம் அருகே குளத்தில் மூதாட்டி சடலம் மீட்பு

புழல்: சோழவரம் அருகே குளத்தில் இருந்து மூதாட்டியின் சடலத்தை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சோழவரம் அடுத்த அருமந்தை ஞாயிறு நெடுஞ்சாலை சேர்ந்தவர் கன்னியம்மாள்(70). இவர், கடந்த 29ம்தேதி வீட்டிலிருந்து புறப்பட்டு அருகிலுள்ள கடைக்கு சென்றுவிட்டு வருவதாக சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால், அவருடைய மகள் அமுல்(45) உறவினர்களிடமும், தெரிந்தவர்களிடமும் விசாரித்தபோது எங்கும் வரவில்லை என தெரிவித்தனர்.

இதனையடுத்து, நேற்று காலையில் சோழவரம் காவல் நிலையத்தில், தனது அம்மா கன்னியம்மாள் காணவில்லை என புகார் கொடுத்தார்.  புகாரின்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று காலையில் வீட்டின் எதிரே உள்ள அருமந்தை ஊராட்சிக்கு சொந்தமான நல்ல தண்ணீர் குளத்தில் பெண் சடலம் மிதப்பதாக, அந்த வழியாக சென்றவர்கள் சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பெயரில் சோழவரம் போலீசார் மற்றும் செங்குன்றம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை மீட்டு விசாரணை செய்ததில் காணாமல்போன கன்னியம்மாள் என தெரியவந்தது. பின்னர், சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டி குளத்தின் அருகே நடந்து சென்றபோது நிலை தடுமாறி குளத்தில் விழுந்தாரா அல்லது யாராவது தள்ளிவிட்டார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சோழவரம் அருகே குளத்தில் மூதாட்டி சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: