சோழவரம் அருகே பரபரப்பு 2 குடிசை வீடுகளில் திடீர் தீ விபத்து

புழல்: சோழவரம் அடுத்த கும்மனூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது, வீட்டின் அருகில் வசிப்பவர் ஆறுமுகம். இவர்கள், நேற்று முன்தினம் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த நிலையில், 2 குடிசை வீடுகளும் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கின.  இவ்வாறு, தீப்பற்றி எரியும்பொழுது ஒரு வீட்டிலிருந்த சிலிண்டர் ஒன்று வெடித்தது.

இந்த, தீ விபத்தில் 2 குடிசை வீடுகளில் இருந்த டிவி, பீரோ, வாஷிங் மெஷின், வீட்டில் வளர்த்து வந்த கோழி, பறவைகள் என சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட சான்றுகள் மொத்தமாக தீயில் கருகி நாசமாயின. இந்த தீ விபத்து குறித்து சோழவரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சோழவரம் அருகே பரபரப்பு 2 குடிசை வீடுகளில் திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: