மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொதுப் பிரச்னைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 541 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

இதில், நிலம் சம்பந்தமாக 128 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 77 மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி 64 மனுக்களும், பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 98 மனுக்களும், மற்றும் இதர துறைகள் சார்பாக 174 மனுக்களும் என மொத்தம் 541 மனுக்கள் பெறப்பட்டன.பெறப்பட்ட இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான காப்பீடுத் திட்டத்தின் கீழ் 3 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.2,03,700 மதிப்பில் நவீன செயற்கை கருவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) என்.ஓ.சுகபுத்ரா, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, வருவாய் கோட்டாட்சியர்கள் (திருவள்ளூர்) கற்பகம், (திருத்தணி) தீபா, தனித் துணை கலெக்டர் கணேசன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன் மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: